செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

புதுவையில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்ன?- கவர்னர் கிரண்பேடி அதிர்ச்சி தகவல்

Published On 2020-09-14 09:37 GMT   |   Update On 2020-09-14 09:37 GMT
கொரோனா தொற்று அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வர தவறுவதுதான் உயிரிழப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு நியமித்த குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை செயல்படத் தொடங்கி உள்ளோம்.

அதே நேரத்தில் கொரோனா தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்திய அளவு சதவீதத்தை விட புதுவையில் அதிகம்.

இதற்கு தொற்று அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைக்கு வர தவறுவதுதான் முக்கிய காரணம். தொடக்க நிலையிலேயே பரிசோதிப்பது அவசியம். இதுவே இறப்பு எண்ணிக்கையை குறைக்கும்.

தற்போது புதுவையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்துவது அவசியம்.

தொற்று பாதித்தவர்களை வெகு விரைவில் கண்டறிந்து சிகிச்சை தரும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

இது இறப்பு எண்ணிக்கையை குறைக்கும். அத்துடன் முகக்கவசம் அணிய தவறாதீர். சமூக இடைவெளியும் அவசியம். கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

விழாக்களில் பங்கேற்பதை தவிர்த்து விடுங்கள். மக்களும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பது அவசியம்.

இவ்வாறு கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News