செய்திகள்
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெற்றுக்கொண்ட காட்சி.

காங்கேயம் தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்

Published On 2021-10-23 09:09 GMT   |   Update On 2021-10-23 09:09 GMT
காங்கயம் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளான பெரியசாமிநகர், செம்மாண்டம்பாளையம், மூலனூர் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
திருப்பூர்:

காங்கயம் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

காங்கயம் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளான பெரியசாமிநகர், செம்மாண்டம்பாளையம், மூலனூர் ரோடு, கிறிஸ்துவ தெரு, புதுப்பாளையம், நடேசன் நகர், கச்சேரிவலசு, இந்திராநகர், பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்களித்தபொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்யவும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சுற்று பயணம் மேற்கொண்டார். 

இந்த பயணத்தின்போது, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனை பட்டா, புதியகுடும்ப அட்டை, சாலைவசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள்பெறப்பட்டன.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்தநிகழ்ச்சியில் தி.மு.க. நகர,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News