தொழில்நுட்பம்
நான்கு நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நான்கு நாட்களுக்கு தினமும் இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவினை கடந்த மாதம் இலவசமாக வழங்கியது. இதே போன்று ஜியோ தற்சமயம் 2 ஜிபி ட்ட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
ஜியோ வழங்கும் இலவச 2 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு பொருந்தும். இவை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் பயனர்களின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகிறது. ஜியோ இலவச டேட்டா சலுகையை பெற மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இலவச டேட்டா வழங்கப்படும் தேதி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வேறுபடும்.
இலவச டேட்டா பயனரின் பழைய டேட்டா பேக் சலுகையின் மேல் வழங்கப்படுகிறது. அதாவது பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை தேர்வு செய்திருந்தால், அவருக்கு மொத்தம் 3.5 ஜிபி டேட்டா நாள் ஒன்றுக்கு வழங்கப்படும்.
ஜியோ தவிர வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கி வருகிறது.