செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் அருகே சிறுமி கடத்தல்

Published On 2021-10-22 07:45 GMT   |   Update On 2021-10-22 07:45 GMT
13 வயது சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள நம்பகவுண்டம்பாளையம் பொய்யேரிமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். 

அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை எனவும் தனது மகள் பழகி வந்த ஆண் நண்பர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். 

புகாரின்பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார், தலைமை காவலர்கள் மணிமுத்து, சிவசுப்பிரமணியம் ஆகியோர்  விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News