செய்திகள்
ஏசி பேருந்து

தமிழகத்தில் ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி- தமிழக அரசு

Published On 2021-02-19 07:28 GMT   |   Update On 2021-02-19 07:28 GMT
தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

* பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம்.

* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* 2020 மார்ச் 25 முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News