செய்திகள்
நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2021-03-11 15:08 GMT   |   Update On 2021-03-11 15:08 GMT
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி:

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனிடையே, இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக – அதிமுக கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளிலும், பாஜக – அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News