செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

Published On 2021-01-11 04:27 GMT   |   Update On 2021-01-11 04:27 GMT
கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த மேலேரிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுரேஷ் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News