செய்திகள்
அரசங்குளம் பகுதியில் பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள்.

தண்ணீர் தட்டுப்பாடு- செவ்வந்தி பூக்கள் விளைச்சல் குறைவு

Published On 2021-04-08 09:31 GMT   |   Update On 2021-04-08 09:31 GMT
காரியாபட்டி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் செவ்வந்தி பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே அரசங்குளம் பகுதியில் மல்லிகை பூக்கள், செவ்வந்தி பூக்கள், காய்கறி, வெங்காயம் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதால் தற்போது விவசாயம் செய்யும் பரப்பளவும் குறைந்து வருகிறது. 5 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயிகள் இன்று ஒரு ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர்.

கிடைக்கும் தண்ணீரை வைத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது செவ்வந்தி பூ சாகுபடி செய்தனர். இந்த பூக்கள் தற்போது பூக்க ஆரம்பித்து விட்டன.

போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு பூக்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி பகுதியில் உள்ள எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் பிழைத்து வருகிறோம்.

இந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும் இருக்கிற தண்ணீரை வைத்து செவ்வந்தி பூ சாகுபடி செய்தோம். அது தற்போது பூக்க ஆரம்பித்து விட்டது.

இருப்பினும் தண்ணீர் போதுமான அளவு இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் எதிர்பார்த்த அளவு பூக்களில் மகசூல் பெறமுடியவில்லை.

எனவே இந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்வதற்கு நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் மூலம் இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News