உள்ளூர் செய்திகள்
கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி வேலூர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கணேசன் (18).
இவர் பழனியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார். அவரது மாமா ரவிச்சதந்திரன் மற்றும் அவரின் ஊரை சேர்ந்தவர்களுடன் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க வந்தனர்.
இவர்கள் அனைவரும் ஊஞ்சலூர் காவிரி ஆற்றுப்படித் துறைக்கு தீர்த்தம் எடுக்க சென்றனர்.
அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ற கணேசன் தண்ணீரில் மூழ்கி விட்டார்.
அருகில் அவருடன் வந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய கணேசனை மீட்டு கொடுமுடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின் கணேசனின் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.