ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

Published On 2021-11-03 07:54 GMT   |   Update On 2021-11-03 07:54 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது.
திருமலை

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. எனவே அன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News