செய்திகள்
ஆரவாரத்துடன் தொடங்கியது ஐபிஎல் இறுதிப் போட்டி- சென்னை அணி பேட்டிங்
ஐபிஎல் லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை அணி: டூ பிளெசிஸ், கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, டோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹாசில்வுட்
கொல்கத்தா அணி: வெங்கடேஷ் அய்யர், சுப்மான் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, லோக்கி பெர்குசன்.
லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் சென்னை அணியினர் களமிறங்கி உள்ளனர்.
கொல்கத்தா அணியை பெருத்தவரை பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. எனவே, சென்னை அணிக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.