செய்திகள்
கோப்புபடம்

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 26 பேர் கைது

Published On 2020-10-26 07:50 GMT   |   Update On 2020-10-26 07:50 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 26 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 700 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். 

அப்போது தர்மபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 26 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 700 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News