செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி கொலை
ஆண்டிப்பட்டி அருகே மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் உள்ளது. இங்கு மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று கழுத்து அறுக்கப்பட்டும் பின் பகுதியில் கத்தி சொருகிய நிலையிலும் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த நாகு என்ற நாகேந்திரன் (வயது 50) என்பது தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் நாகேந்திரனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் ஆகியோர் உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்காக திருச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் நாகேந்திரன் தனியாக இருந்தார். இதை மர்மநபர்கள் நோட்டமிட்டு அவரை வீட்டில் இருந்து காரில் கடத்தி வந்தனர். பின்னர் அவரை மர்மநபர்கள் மறைவான இடத்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு திம்மரசநாயக்கனூரில் சாலையோரம் பிணத்தை வீசி சென்று உள்ளனர்.
இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் உள்ளது. இங்கு மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று கழுத்து அறுக்கப்பட்டும் பின் பகுதியில் கத்தி சொருகிய நிலையிலும் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த நாகு என்ற நாகேந்திரன் (வயது 50) என்பது தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் நாகேந்திரனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் ஆகியோர் உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்காக திருச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் நாகேந்திரன் தனியாக இருந்தார். இதை மர்மநபர்கள் நோட்டமிட்டு அவரை வீட்டில் இருந்து காரில் கடத்தி வந்தனர். பின்னர் அவரை மர்மநபர்கள் மறைவான இடத்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு திம்மரசநாயக்கனூரில் சாலையோரம் பிணத்தை வீசி சென்று உள்ளனர்.
இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.