ஆன்மிகம்
எம்.கண்ணனூர் கிராமத்தில் இருந்து மாரியம்மன் பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரை

எம்.கண்ணனூர் கிராமத்தில் இருந்து மாரியம்மன் பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரை

Published On 2021-02-06 07:37 GMT   |   Update On 2021-02-06 07:37 GMT
திருச்சி மாவட்டம் எம்.கண்ணணூர் கிராமத்தில் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் மாலை அணிந்து பால்குடம் எடுத்து வேண்டுதல் நிறைவேற்றி சமயபுரத்துக்கு பாதயாத்திரை வந்தனர்.
திருச்சி மாவட்டம் எம்.கண்ணணூர் கிராமத்தில் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் மாலை அணிந்து பால்குடம் எடுத்து வேண்டுதல் நிறைவேற்றி சமயபுரத்துக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் இங்குள்ள மாரியம்மன் கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். கடந்த 2-ந்தேதி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு சாமி திருவீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News