செய்திகள்
கூத்தாநல்லூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
கூத்தாநல்லூர் பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளை செய்து வரும் விவசாயிகள் மழை பொழிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
குறுவை சாகுபடி பணிகளை செய்து வரும் அப்பகுதி விவசாயிகள் மழை பொழிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் போதிய அளவு மழை பொழிவும் இல்லாமல் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெயில் கொடுமையில் இருந்து விடுப்படுவதற்காக எப்போது மழை வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.