செய்திகள்
கேரளாவில் மேலும் 15,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,223 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நிலையில், 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,67,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 23,683 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 89,722 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.