செய்திகள்
நகை பறிப்பு

கணியம்பாடி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2020-11-22 04:46 GMT   |   Update On 2020-11-22 04:46 GMT
கணியம்பாடி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்கம்பாறை:

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள களம்பூரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குணதேவி (வயது 35). இவர், கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென குணதேவி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News