செய்திகள்
தற்கொலை

சுங்குவார்சத்திரம் அருகே வேலை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2021-07-16 14:57 GMT   |   Update On 2021-07-16 14:57 GMT
சுங்குவார்சத்திரம் அருகே வேலை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தார்.

மேலும் விக்னேஷ் மது பழக்கத்துக்கு அடிமையாகி மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் விக்னேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News