ஆன்மிகம்
கடலூர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-02-15 05:46 GMT   |   Update On 2021-02-15 05:46 GMT
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதர்மம் நடைபெற்று வருகிறது.

அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமான நாள் ஆகும். அந்த வகையில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணி அளவில் உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News