செய்திகள்

தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் அனாதையாக வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Published On 2019-03-09 15:48 GMT   |   Update On 2019-03-09 15:48 GMT
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ராசாமிராசுதாரர் மருத்துவமனையில் அனாதையாக வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்க்கப்பட்டதையடுத்து தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதாரர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல் ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அழுது கொண்டிருந்த அந்த குழந்தை அருகில் யாரும் இல்லை. நீண்ட நேரமாக அந்த குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் வராததால் அந்த குழந்தையை வேண்டாம் என்று வீசி சென்று இருக்கலாம் என்று கருதிய பொதுமக்கள் இதுபற்றி தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அனாதையாக விடப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த குழந்தையின் இரு காதுகளிலும் மடல் இல்லாமல் குறைபாட்டுடன் உள்ளது. அதனால் குழந்தையை வளர்க்க விரும்பமில்லாமல் தாய் விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி குழந்தையின் தாயை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News