உடற்பயிற்சி
ஆகாய முத்திரை, சண்முகி முத்திரை

காது நன்கு இயங்க எளிய யோகமுறை முத்திரை

Published On 2021-12-27 02:42 GMT   |   Update On 2021-12-27 02:42 GMT
காதுவலி, வீக்கம், காதில் புண், சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் வரும். இத்தனை பிரச்சனைகளும் வராமல் இருக்க நாம் எளிமையான முத்திரைகள் செய்து நமது காதை வளமாக வைத்துக் கொள்ளலாம்.
காது கேட்காது என்ற நிலை மனிதர்களுக்கு வரக்கூடாது. காது கேட்க வேண்டும். நல்ல விஷயங்களை வாழ்வில் கேட்க வேண்டும். அப்பொழுது தான் நமது வாழ்வு வளமாக, நலமாக இருக்கும்.வீட்டில் இருந்தாலும், வண்டியில் சென்றாலும் வெளி ஓசை கேட்டால் தான் நாம் விபத்தை தவிர்க்க முடியும்.

காது ஒரு அற்புதமான உறுப்பாகும். பொதுவாக இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத் தாண்டினாலே நிறைய நபர்களுக்கு காது ஒழுங்காகக் கேட்பதில்லை. காரணம் தொடர்ந்து செல்போன் பேசுவதால் அதன் கதிரியக்கம் காது நரம்புகளை பாதிப்படைய செய்கின்றது.சில நபர்களுக்கு காதில் ஏதோ ஒரு ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் தூக்கம் வராது. மன உளைச்சல் ஏற்படும்.

காதுவலி, வீக்கம், காதில் புண், சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் வரும். இத்தனை பிரச்சனைகளும் வராமல் இருக்க நாம் எளிமையான முத்திரைகள் செய்து நமது காதை வளமாக வைத்துக் கொள்ளலாம்.

ஆகாய முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் தியானிக்கவும். இப்பொழுது நடுவிரல் நுனியையும், பெருவிரல் நுனியையும் இணைத்து மற்ற விரல்களை தரையை நோக்கி வைக்கவும். இருக்கைகளில் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

சண்முகி முத்திரை:

நிமிர்ந்து விரிப்பில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் தியானிக்கவும். பின் இரு கட்டை விரல்களையும் காதை நன்கு அடைக்கவும். மற்ற விரல்களை படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். காது வழியாக மூச்சு வெளியில் செல்லாமல் அடைத்துக் கொள்ளவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் இரண்டு தடவை செய்யவும்.

Tags:    

Similar News