செய்திகள்
கோப்புபடம்

சேதராப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி

Published On 2021-09-09 15:17 GMT   |   Update On 2021-09-09 15:17 GMT
சேதராப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

திருக்கனூர் அருகே தமிழக பகுதியான கலித்தீரன்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தனர் காசிநாதன். இவரது மனைவி கனகராணி (வயது62). இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

காசிநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கனகராணி உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். அதுபோல் கடந்த சில நாட்களாக சேதராப்பட்டு புதுக்காலனியில் உள்ள தனது அண்ணன் மகன் பாபு வீட்டில் கனகராணி தங்கியிருந்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை கனகராணி சேதராப்பட்டு மெயின் ரோட்டில் சாலை யோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கனகராணி மீது மோதியது.

மோட்டார் சைக்கிள் மோதியதில் உடலில் வெளிக்காயம் ஏற்படாததால் கனகராணி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையடுத்து அவர் தனது அண்ணன் மகன் வீட்டுக்கு சென்று தூங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கனக ராணியை சிகிச்சைக்காக அவரது அண்ணன் மகன் குடும்பத்தினர் கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கனகராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வில்லியனூர் அருகே அரியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாந்தி (வயது57). நேற்று காலை இவர் வில்லியனூருக்கு செல்ல அரியூரில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் வந்தார். வில்லியனூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்ற போது சாந்தி கீழே இறங்குவதற்குள் டிரைவர் பஸ்சை எடுத்து விட்டார்.

இதனால் சாந்தி தடுமாறி கீழே விழுந்தார். இதில் வலது கை மணிகட்டில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சாந்தியை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News