உள்ளூர் செய்திகள்
அணை பகுதியில் மீண்டும் மழை பெய்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் அணை பகுதிகளில் மீண்டும் மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
கன்னிமார், சுருளோடு, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 13.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.