ஆன்மிகம்
அத்திமலைப்பட்டு வரதராஜபெருமாள் கோவிலில் நாகநதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் பூமி நீலாதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடந்தது.
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் பூமி நீலாதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. அதையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடந்தது.
பூமிநீலாதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில் அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பூமிநீலாதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில் அத்திமலைப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.