தோஷ பரிகாரங்கள்
ஏகவுரி அம்மன்

பிராது கொடுத்தால் பிரச்சனை தீர்க்கும் ஏகவுரி அம்மன்

Published On 2022-05-10 08:42 GMT   |   Update On 2022-05-10 08:42 GMT
இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே மிக அமைதியான சூழலில், பெரிதாக எடுப்பிக்கப்பட்டுள்ள மிகத் தொன்மையான கோவில் வல்லம் ஆலக்குடி சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

வல்லம் கடைத்தெருவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும், ஆலக்குடியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மிகச் சக்தி வாய்ந்த இந்த ஏகவுரியம்மனை நாடி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் அதிக மக்கள் வருகின்றனர்.

ஊர்ப்பஞ்சாயத்திலோ, நீதிமன்றத்திலோ நியாயம் கிடைக்கப் பெறாத மக்களும், நீதிமன்றத்திற்குச் செல்ல வசதியற்ற மக்களும் இந்த ஏகவுரியம்மனிடம் வந்து முறையிடுகின்றனர்.

பக்தர்கள் தங்கள் முறையீட்டை ஒரு காகிதத்தில் எழுதி அதாவது சீட்டு எழுதி அதனை வல்லம் கௌரி அம்மன் கையில் கட்டச் செய்துவிட்டுச் சென்றால், விரைவில் அதற்கான நியாயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே இந்த கௌரியம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News