உள்ளூர் செய்திகள்
கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் கோட்டை பெரியார் பூங்காவிற்கு விரைவில் மறு ஏலம்

Published On 2022-01-13 10:06 GMT   |   Update On 2022-01-13 10:06 GMT
வேலூர் கோட்டை பெரியார் பூங்காவிற்கு விரைவில் மறு ஏலம் வரும் என கலெக்டர் தகவல் தெறிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கோட்டை அருகே உள்ள பெரியார் பூங்காவினை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்ததாரர் குத்தகையினை மேலும் நீட்டிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதனை எதிர்த்து குத்தகைதாரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், கால நீட்டிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் ஆட்சேபனை தெரிவித்தார்.

தனி நீதிபதி உத்தரவினை செயல்படுத்தி வேலூர் கோட்டை பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்ற அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

கோர்ட்டு உத்தரவுப்படி பெரியார் பூங்கா குத்தகைதாரரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரியார் பூங்காவிற்கு மறு ஏலம் நடத்தப்பட்டு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதில் இப்போது இருந்த குத்தகைதாரர் கூட பங்கேற்கலாம் என்றார்.
Tags:    

Similar News