செய்திகள்
கனிமொழி

சிவகங்கை மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம்

Published On 2021-01-23 02:51 GMT   |   Update On 2021-01-23 02:51 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(25-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கலந்துகொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். நாளை காலை 8.30 மணிக்கு காரைக்குடியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தல், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சங்கராபுரம், சிறுவாச்சியில் கிராம சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் தேவகோட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திடக்கோட்டை கிராமத்தில் வணிகர்கள், விவசாயிகள் ஆகியோருடன் சந்திக்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு தேவகோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ரூசோ சிலைக்கு மாலை அணிவித்தல், குன்றக்குடியில் பொதுமக்கள் சந்திப்பு, திருப்பத்தூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் வியாபாரிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு மகளிர் குழுவினரை சந்தித்து குறைகள் கேட்கிறார். பின்னர் மகிபாலன்பட்டி கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டம் உலகம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டல், எஸ்.புதூர் ஒன்றியத்தில் விவசாயிகள் சந்திப்பு மற்றும் இரவு சிங்கம்புணரியில் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு கல்லலில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டல், காளையார்கோவில் ஒன்றியம் ஆலவிளாம்பட்டியில் சமுதாய கூடம் திறப்பு, சிவகங்கை ஒன்றியம் அலவாக்கோட்டையில் இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு, காளையார்கோவிலில் கிராம சபை கூட்டம், இண்டன்குளத்தில் மின்சாரம் தாக்கி இறந்த தி.மு.க. தொண்டர் லூர்துசாமி வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தல், இளையான்குடி நகரில் பொதுக்கூட்டம், சாலைகிராமத்தில் விவசாயிகளுடன் சந்திப்பு, கீழநெட்டூர் கிராமத்தில் பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மாலை 5.30 மணிக்கு மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களுடன் சந்திப்பு, ராஜகம்பீரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் சந்திப்பு, கொம்புகாரனேந்தல் கிராமத்தில் தா.கிருட்டிணன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு இரவு 7.15 மணிக்கு திருப்புவனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News