ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை நாளை நடக்கிறது

Published On 2021-11-18 08:49 GMT   |   Update On 2021-11-18 08:49 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருடசேவை (தங்க கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம்.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News