செய்திகள்
விஷம்

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-07-22 10:47 GMT   |   Update On 2021-07-22 10:47 GMT
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக படித்து வந்த கல்லூரி மாணவி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
நெல்லை:

சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகள் முத்து ரஞ்சினி (வயது 18). கல்லூரி மாணவி.

கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக படித்து வந்த முத்து ரஞ்சினி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனை அவரது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த முத்து ரஞ்சினி கடந்த 17-ந் தேதி வி‌ஷம் குடித்தார். உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முத்து ரஞ்சினி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News