ஆன்மிகம்
தீமிதி விழா

கும்பகோணம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2021-03-19 05:37 GMT   |   Update On 2021-03-19 05:37 GMT
கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரவுபதி அம்மன் கோவிலில் மகோத்சவ திருவிழா மற்றும் குடமுழுக்கு பூர்த்தி விழா ஆகியவை நடந்தது.

விழாவையொட்டி கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சீர்வரிசையுடன் புறப்பாடும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

பின்னர் அரசலாற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் வீதி உலாவும், கஞ்சி வார்த்தல், ஊஞ்சல் உற்சவமும், தர்மர் பட்டாபிஷேக வைபவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News