ஆன்மிகம்
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடுவது ஒத்திவைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டுகளை வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி செப்டம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 டிக்கெட்டுகளை வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.