செய்திகள்
கோப்புப்படம்

திருமணம் செய்வதாக ஏமாற்றி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2021-09-09 10:23 GMT   |   Update On 2021-09-09 10:23 GMT
மதுரையில் திருமணம் செய்வதாக கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை உலகநேரியை சேர்ந்தவர் சிவா (வயது 29). இவர் அங்குள்ள பழத்தோட்டத்தில் ஊழியராக உள்ளார். சிவாவுக்கும், அதே பகுதியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் பேசி பழகி வந்தனர்.

சம்பவத்தன்று சிவா அந்த மாணவியை பழத்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். மாணவியிடம் அத்துமீறும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். “உன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சிவா வாக்குறுதி கொடுத்தார். இதனை அந்த சிறுமி நம்பி விட்டார்.

அதன் பிறகு அவர் அந்த சிறுமியுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார்.  தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி வற்புறுத்தியுள்ளார். சிவா திருமணத்திற்கு தாமதப்படுத்தியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் சிவாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News