செய்திகள்
கோப்புபடம்

காஞ்சீபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-16 12:01 GMT   |   Update On 2020-10-16 12:01 GMT
காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காஞ்சீபுரம் பொன்னேரி கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவு தூணில் இருந்து பேரணியாக நடந்து சென்று காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அபுதுல்மாலிக் தலைமை தாங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் யுவராஜ், மணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News