செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,514 கன அடியாக குறைந்தது

Published On 2021-07-21 08:12 GMT   |   Update On 2021-07-21 08:12 GMT
கபினி அணை நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சேலம்:

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணை நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 16 ஆயிரம் அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை அதே நிலையில் நீடித்தது.

இதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 16 ஆயிரத்து 804 கனஅடியாக இருந்த நீர்வரத்து சற்று குறைந்து 14 ஆயிரத்து 514 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர் திறப்பை விட வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 73.29 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 73.51 அடியாக உயர்ந்தது.
Tags:    

Similar News