லைஃப்ஸ்டைல்
தக்காளி தேங்காய்ப்பால் சூப்

தக்காளி தேங்காய்ப்பால் சூப்

Published On 2019-11-01 04:33 GMT   |   Update On 2019-11-01 04:33 GMT
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று தக்காளி, தேங்காய் பால் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

தக்காளி - 2,
தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
பிரெட் துண்டுகள் - 2
உப்பு - தேவையான அளவு.



செய்முறை

பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து விழுதாக அரைக்கவும்.

பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும்.

சூப்பரான தக்காளி தேங்காய்ப்பால் சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News