ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-01-11 05:36 GMT   |   Update On 2021-01-11 05:36 GMT
திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருச்சி மாநகரின் புராதனக் கோவில்களுடன் இணை சிறப்புடன் தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 

நாளை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், பகல் 12 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றும் வைபவமும் நடைபெறுகிறது. 

13-ந் தேதி(புதன்கிழமை) அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
Tags:    

Similar News