செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

5, 8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-11-27 08:39 GMT   |   Update On 2019-11-27 08:39 GMT
5, 8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது ஏன் என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
நம்பியூர்:

நம்பியூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நம்பியூர், திருப்பூர் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை பின்பு ரூ. 2 கோடியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைய உள்ளது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

இந்திய அளவில் சட்டம் ஒழுங்கை காப்பதிலும், தூய்மையான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

12-ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500 ஆடிட்டர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.



நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகு தான் அது குறித்து பேச முடியும்.

கடந்த ஆண்டு ஒரு மாணவர் கூட சேரவில்லை. 5, 8, வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்க எதிர்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின் கல்வி, அறிவுத்திறன், தகுதி, திறமையை கண்டறிய முடிவில்லை. அதே நேரத்தில் மாணவர்கள் பயப்பட தேவை இல்லை.

வேலை நேரத்தில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்ற புகார் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News