ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2021-11-02 03:34 GMT   |   Update On 2021-11-02 05:22 GMT
மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News