உள்ளூர் செய்திகள்
.

மாற்று திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது

Published On 2022-04-15 07:29 GMT   |   Update On 2022-04-15 07:29 GMT
தருமபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழி லாளியை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்,
 
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள போடம் பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 50, கூலித்தொழிலாளி. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27&ந் தேதி 22 வயதுடைய கண் பார்வை குறைபாடுடைய பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை பாலியல் பலத்காரம் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். 

கடந்த 3 வாரமாக அப்பெண் வாந்தி, வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. நடந்ததை பெற்றோரிடம் அப்பெண் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் புகார்படி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வான்மதி, தொழிலாளி பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News