செய்திகள்
கோப்புப்படம்

கொசஸ்தலை ஆற்றில் குதித்து ஆசிரியர் தற்கொலை

Published On 2019-11-13 08:47 GMT   |   Update On 2019-11-13 08:47 GMT
மணலி புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

திருவொற்றியூர் மணலி புதுநகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு தன்யா (6) என்ற மகள் உள்ளார்.

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு உதயகுமாருக்கும் அவரது மனைவி மைதிலிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மைதிலி கணவனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

உதயகுமார் மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை சமாதானம் செய்தும் அவர் வரவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை உதயகுமார் மணலி புதுநகர் கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்திற்கு வந்தார். திடீரென அவர் அங்கிருந்து ஆற்றில் குதித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு படையினர் உதவியுடன் உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News