ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா 15-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-01-13 07:17 GMT   |   Update On 2021-01-13 07:17 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நாளை மறுநாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை நடை திறப்பு, அய்யாவுக்கு பணிவிடை, காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பால.பிரஜாபதி அடிகளார் திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்குதல், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் நடக்கிறது. விழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவில் 16-ந்தேதி இரவு அய்யா வைகுண்ட சாமி பரங்கி நாற்காலியில் வலம் வரும் நிகழ்ச்சி,

17-ந்தேதி அய்யா வெள்ளை சாத்தி அன்ன வாகன பவனி, 18-ந்தேதி பூஞ்சப்பரம் வாகன பவனி, 19-ந்தேதி பச்சை சாத்தி சப்பர வாகன பவனி, 20-ந்தேதி கற்பக வாகன பவனி, 21-ந்தேதி சிவப்பு சாத்தி கருட வாகன பவனி ஆகியவை நடக்கிறது.

8-ம் திருவிழாவான 22-ந்தேதி அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி, 25-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News