செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 285 பேர் பாதிப்பு

Published On 2021-04-04 12:21 GMT   |   Update On 2021-04-04 12:21 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 285 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 176-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 176-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்தது. 2,064 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது. 559 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News