செய்திகள்
திருப்பூரில் கடன் தொல்லையால் பனியன் தொழிலாளி தற்கொலை
வாழ்க்கையில் விரக்தியடைந்த தவனேசன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்துள்ள தண்ணீர்பந்தல்காலனிபகுதியில் உள்ள ஹாஸ்டல் காலனியில் வசித்து வந்தவர் தவனேசன் (வயது 47). இவர் அதே பகுதயில் உள்ள பனியன் கம்பெனியில் செக்கிங் காண்ட்ராக்டராக பணியாற்றிவந்தார்.
கொரோனா காரணமாக பனியன் கம்பெனியில் சரிவர வேலை இல்லாததால் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தவனேசன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தவனேசனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.