செய்திகள்
தவான் மீண்டும் சதம்: பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி
சென்னை போட்டியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும் சதம் அடித்து தவான் சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் ஆட்மிழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தவான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அரைசசதம் அடித்த தவான் சதத்தை நோக்கி சென்றார்.
அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழக்க, 19-வது ஓவரின் 4-வது பந்தில் இரண்டு ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இவரது சதத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது.
தவான் 57 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்து 61 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தவான் 61 பந்தில் 106 ரன்கள் எடுத்த போதிலும், 4 உதிரி ரன்களுடன் டெல்லியின் மற்ற பேட்ஸ்மேன்கள 59 பந்தில் 54 54 ரன்களே எடுத்தனர்.