செய்திகள்
கைது

மணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-02-20 10:47 GMT   |   Update On 2021-02-20 11:01 GMT
மணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அருகே மணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையிலான போலீசார் மணப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது மணப்பள்ளி காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மணப்பள்ளியை சேர்ந்த கதிர்வேல் (வயது 46), ராஜகணபதி (26), தேவேந்திரன் (28), ராஜ்குமார் (24) மற்றும் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த முரளிதரன் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News