செய்திகள்
பல்லாவரம் மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பல்லாவரத்தில் புதிய மேம்பாலம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-09-17 06:41 GMT   |   Update On 2020-09-17 06:41 GMT
சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.82.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:

சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.82.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

1.53 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பல்லாவரம் பேருந்து நிலையம் முன் தொடங்கும் புதிய பாலம், விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் நிறைவடையும்.

தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வருபவர்கள் பயன்படுத்தும் வகையில் ஒருவழிப்பாதையாக புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.

Tags:    

Similar News