செய்திகள்
விபத்து

மேலூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விபத்தில் பலி

Published On 2021-07-22 10:59 GMT   |   Update On 2021-07-22 10:59 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்ன சூரகுண்டு ஊரைச் சேர்ந்தவர் சுதந்திரம் (வயது 70). இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார்.

இன்று காலை இவர் தனது மோட்டார் சைக்கிளில் சின்ன சூரக்குண்டில் இருந்து மதுரை நோக்கி 4வழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது தெற்கு தெரு அருகே ரோட்டை கடக்கும்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுதந்திரம் இறந்தார்.

இதுகுறித்து மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அவரது உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News