செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா

Published On 2021-07-16 13:11 GMT   |   Update On 2021-07-16 13:11 GMT
தேனி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி:

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 722 ஆக அதிகரித்தது. இதுவரை 508 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் நேற்று குணமாகினர். தற்போது கொரோனா பாதிப்புடன் 323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News