செய்திகள்
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் டி.கே.சிவக்குமார், அமர்ந்து இருந்த காட்சி.

சட்டத்தைவிட அதிக பலமாக இருக்கும் அரசியல் பழிவாங்கும் போக்கு- டி.கே.சிவக்குமார்

Published On 2019-09-05 02:20 GMT   |   Update On 2019-09-05 02:20 GMT
டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கூறிய கருத்தில், நாட்டில் தற்போது சட்டத்தைவிட அரசியல் பழிவாங்கும் போக்கு அதிக பலமாக இருக்கிறது என்றார்.
பெங்களூரு :

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை கைது செய்துள்ளனர். நேற்று அவர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு வக்கீல்கள் மூலம் முறையிட்டார். ஆனால் அவருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கூறிய கருத்தில், ‘’நாட்டில் தற்போது சட்டத்தைவிட அரசியல் பழிவாங்கும் போக்கு அதிக பலமாக இருக்கிறது” என்றார். போலீஸ் காவலில் இருக்கும் நாட்களில் அவரை குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்தித்து பேச தினமும் அரை மணி நேரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

Similar News