உள்ளூர் செய்திகள்
காந்தி ரோடு கடைத்தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிஸாட்டிக் பொருட்களை பறிமுதல் செய்த போது எடுத்த படம்.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

Published On 2022-05-05 09:17 GMT   |   Update On 2022-05-05 09:17 GMT
ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட் காந்தி ரோட்டில் உள்ள வணிக விற்பனை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து பொதுமக்களுக்கும் மற்ற சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வருவதை கடையில் சென்று பொருட்கள் இருந்ததை பார்த்து அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார். 

அதில் சுமார் 1.5டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விற்பனை செய்த கடைக்காரருக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து துணி மஞ்சப்பை 2000 எண்ணிக்கையில் வாங்கி நகராட்சி அலுவலகத்தில் வழங்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதனை விரைவாக வாங்கி தருவதாக கடைக்காரர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய போவது இல்லை எனவும் கடைக்காரர் தெரிவித்தார்.மேலும் இங்குள்ள கடைகளில் கண்காணிக்கவும் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து விற்பனை செய்யும் கடையினை சீல் வைக்கவும் நகராட்சி ஆணையாளர் ஏகராஜிடம் கலெக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News